Thursday, 16th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
சங்கரன்கோவில்: தென்காசி வடக்கு மாவட்டம் சங்கரன்கோவிலில் வடக்கு மாவட்ட இளைஞரணி புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம் மற்றும் செயல் வீரர்கள் கூட்டம் ராஜபாளையம் சாலையில் உள்ள ஹம்சா அரங்கில் வைத்து நடை பெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ தலைமை வகித்தார். தலைமை செயற்குழு உறுப்பினர்கள் யூஎஸ்டி சீனிவாசன் பரமகுரு ,மாவட்ட அவைத் தலைவர் பத்மநாதன், மாநில மருத்துவர் அணி துணை செயலாளர் டாக்டர் செண்பக விநாயகம் மாவட்ட துணை செயலாளர்கள் புனிதா, மனோகரன் முன்னிலை வகித்தனர்.
இதில் தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ இளைஞர் அணிக்கு மாவட்ட அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள முகேஷ் துணை அமைப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள ராஜராஜன், கார்த்தி, மணிகண்டன், அன்சாரி, ராஜ் ஆகியோரை அறிமுகப்படுத்தி பேசினார்.
தொடர்ந்து செயற்குழு கூட்டம் நடந்தது .இதில் பேசிய ராஜா எம்எல்ஏ வரும் பாராளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு தீவிரமாக களப்பணி ஆற்ற வேண்டும் எனவும் , இரண்டு ஆண்டு கால கழக அரசின் சாதனைகளை பொதுமக்கள் அதிகம் வகையில் தெருமுனை கூட்டங்கள் பொதுக்கூட்டங்கள் நடத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.
இதில் ஒன்றிய செயலாளர்கள் லாலா சங்கர பாண்டியன், கடற்கரை, பெரியதுரை, பொன்முத்தையாபாண்டியன் பூசைபாண்டியன், மதிமாரிமுத்து, சேர்மதுரை, ராமச்சந்திரன், கிறிஸ்டோபர் வெற்றிவிஜயன் , நகரச் செயலாளர்கள் பிரகாஷ், அந்தோணிசாமி,பொதுக்குழு உறுப்பினர்கள் தேவா என்ற தேவதாஸ், மகேஸ்வரி ,பொறியாளர் அணி பசுபதிபாண்டியன் மற்றும் ஒன்றிய, நகர , பேரூர் கழக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.